திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, April 9, 2012

சமூகத் தீமைகளுக்கு எதிராக தாங்கலில் INTJ சத்தியப் பிரசாரக் கூட்டம்!

,
.
அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் தாங்கல் கிளை சார்பில் இன்று  (07.04.2012) சனியன்று மாலை 6 மணிக்கு தாங்கள் மார்க்கெட்  அருகில் சமூக தீமை ஒழிப்பு மார்க்க விளக்க கூட்டம் இறையருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்




இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர். பீர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேலூர் இப்ராகிம்  முன்னிலை வகிக்க, இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு' எனும் தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் INTJ   சகோதரி. மஸுதா ஆலிமாவும்,,நபி( ஸல்) உருவாக்கிய சமுதாயம் எங்கே ?  என்ற தலைப்பில்  இஸ்லாமிய அழைப்பாளர் INTJ சகோதரர். மௌலவி அலீம் அல்புஹாரிவும்சமூகத் தீமைகளை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது'என்ற தலைப்பில்   INTJ மாநிலச் செயலாளர்  சகோதரர்.  P.M.H. செங்கிஸ்கானும்   மிகஅருமையான உரைகளை ஆற்றினர். இதில் ஆண்களும், பெண்களுமாக கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியை இதஜ தாங்கல் கிளை ஏற்பாடு செய்திருந்தது. (அல்ஹம்துலில்லாஹ்)  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் !    
 எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.                                                                                                            “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக!

1 comments:

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates