கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரத்த தான முகாம் கடந்த 27.12.2011 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் துவங்கி வைத்தார். மாநிலப் பொருளாளர் அபூபக்கர், மாநிலச் செயலாளர் ஃபிர்தவ்ஸ், வளைகுடா பொறுப்பாளர் கீழை ஜமீல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஹாஜா, பக்கீர் ஒலி, கமால் நாசர், துபை மண்டல துணைச் செயலாளர் ஷாஜித் உள்ளிட்டவர் முன்னிலை வகித்தனர்.
இதில் 37 நபர்கள் இரத்த தானம் செய்தனர். தாஸிம் பீவி கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். கீழக்கரை நகராட்சித் தலைவர் ராபியத்துல் காதரிய்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கீழக்கரை நகர் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.
-அபூபக்கர் தம்பி.