திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Wednesday, September 26, 2012

மாற்று மதத்தவ்ருக்கு மாமறைக் குர்ஆனோடு மாநபியின் வாழ்க்கை வரலாறு வழங்கிய மைலாப்பூர் INTJ நிகழ்ச்சி!

,
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மாமறைக் குரானை மக்களிடம் சேர்ப்போம் எனும் மகத்தான முழக்கத்தோடு பல்லாயிரக் கணக்கான திருமறை த்மிழாக்கததை முஸ்லிமல்லாத மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சென்னை சைதாப்பேட்டையில் தன்னுடைய பயணத்தை துவங்கி தமிழகத்தின் அனைத்து பெரிய நகரங்களிலும் நடத்தி முடித்து கடந்த 23.9.12 சென்னை மைலாப்பூரில் சிறப்புற நடை பெற்றது!
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் குவைத் மண்டல தலைவர் ஜாஹித் பிர்தவ்ஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் எஸ்.எம்.பாக்கர் இஸ்லாம் குறித்த அறிமுக உரையில் எம்பெருமாரின் சிறப்புகளைக் குறித்தும அவரைக் குறித்த இன்றைய அவதூறுகளையும் அழகிய முறையில் எடுத்துரைத்தார். முன்னாள் நீலப்புலிகள் இயக்கத் தலைவரும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் உமர் பாருக் அவர்கள் [டி.எம்.மணி ] இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல் எனும் தலைப்பிலும், முன்னாள் கிறிஸ்தவ மத போதகரும் இந்நாள் இஸ்லாமிய அழைப்பாளருமான 'இதுதான் கிறித்தவம்' எனும் நூலாசிரியரான சகோதரர் உமர் பாருக் அவர்கள் என்னைக் கவர்ந்த இஸ்லாம் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த வந்திருந்த முஸ்லிமல்லாத மக்களின் கேள்விகளுக்கு சகோதரர் அப்துல் ஹமித் அவர்கள் அழகிய முறையில் பதில் உரைத்தார்

மாநில நிர்வாகிகள், தொண்டியப்பா, காஜா கரிமுல்லாஹ், கலிமுல்லாஹ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிறமத அன்பர்களுக்கு இறை வேதத்தையும், எம்பெருமானாரின் வாழ்க்கை வரலாறு நூல்களையும் அன்பளிப்பாக வழங்கினர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாமறை அழைக்கிறது நிகழ்ச்சியில் திருமறை பெற முஸ்லிமல்லாத மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாங்கும் நிகழ்வு வழக்கம் போல் இங்கும் நிகழ்ந்தது. அலஹம்துலில்லாஹ்! .தென் சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கலீல் ரஹ்மான் நன்றியுரை நிகழ்த்த விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

0 comments to “மாற்று மதத்தவ்ருக்கு மாமறைக் குர்ஆனோடு மாநபியின் வாழ்க்கை வரலாறு வழங்கிய மைலாப்பூர் INTJ நிகழ்ச்சி!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates