
பா.ஜ. தலைவர்கள் அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்பட 21 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டப்பட்டது. ரேபரேலியில் உள்ள கோர்ட் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து அலகாபாத் ஐகோர்ட்டில் சி.பி.ஐ. அப்பீல் மனு தாக்கல் செய்தது. ஐகோர்ட்டிலும் சி.பி.ஐ.யின் மனு தள்ளுபடியானது. இதனையடுத்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.
மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டு விளக்கம் கேட்டு பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி ,முரளி மனோகர் ஜோஷி, கல்யாண்சிங் மற்றும் சிவசேனா தலைவர் பால்தாக்கரே, உள்பட 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.