திருவல்லிகேணியில் ரத்ததான முகாம்.
திருவல்லிக்கேணி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை கிரேசென்ட்மருத்துவமனை எதிரில் உள்ள ஐஸ் ஹவுஸ் மாநகராட்சி பள்ளியில் நடை பெற்றது. இதில் ஏறளமனோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.இதில் கலந்து கொண்ட மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் உள்ளிட்ட முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு திருமறை தமிழாக்கம் வழங்கப் பட்டது. எஸ்.எம்.பாக்கர், தொண்டியப்பா உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.