திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, February 28, 2012

தஃவா களமான பல்லாவரம் ரத்ததான முகாம்.

,
எங்கும் தஃவா எதிலும் தஃவா எதிலும் தஃவா எனும் இலக்கோடு செயல்படும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்லாவரம் நகரத்தின் சார்பில் இன்று நடை பெற்ற ரத்ததான முகாமில் முஸ்லிமல்லாத குருதிக் கொடையளர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் , நகராட்சி கவுன்சில்ர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் மருத்துவர்களுக்கும் மாமறை குரானின் தமிழாக்கம் வழங்கப் பட்டது.

நாங்கள் தேடிக் கிடைக்காத குரானை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு நன்றி கூடுதல் பிரதி கிடைக்குமா என் நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டும் பணம் வேண்டுமானால் தருகிறேன் என காவல் துறை அதிகாரி சொன்னபோது குரானை கொண்டு சேர்க்கும் நம் பணியை  இன்னும் விரிவாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தியது.  

மேலும் ரத்ததானம் நடந்த இனாயத் மகாலையே நம் சகோதரர்கள் இஸ்லாத்தை காட்சிப் பூர்வமாக எடுத்து சொல்லும் பேனர்களால் நிரப்பி கண் காட்சி போல் வடிவமைத்து இருந்தது வந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.

இதில் தலைமை நிர்வாகிகள்,எஸ்.எம்.பாக்கர், தொண்டியப்பா காஞ்சி ஜாகிர், முஹம்மத மைதீன் அப்துல் ஹமித் மற்றும் காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் ஹசன் அலி , ரஹ்மத்துல்லாஹ் முபாரக் தஸ்தகிர் மற்றும் பல்லாவர நகர நிர்வாகிகள் மற்றும் உம்மு ஹபிபா மதரசா மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு. 
 இஸ்லாத்தை விளக்கும் பேனர்கள் 
 சிறப்பு விருந்தினர்கள் 
 நினைவு பரிசு 
 பார்வையிடும் காவல் ஆய்வாளர் 


 உரை நிகழ்த்தும் காஞ்சி ஜாகிர் 
 தலைவர்களுக்கு நினைவு பரிசு 
 பெண்களும் களத்தில் 
 குருதி கொடுத்தவருக்கு குரான் பரிசு 
 பொருளாளர் தொண்டியப்பாவுடன்   
 ஆட்டோ டிரைவருக்கு அருள் மறை 
 குருதிக் கொடையளிக்கும் நகர நிர்வாகி 

1 comments:

  • March 2, 2012 at 8:07 AM

    masaha allaha...

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates