திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, August 6, 2012

500 பெண்களை திருக்குர்ஆனை புரட்ட செய்த இதஜவின் நிகழ்ச்சி! -ஜமாஅத்துல் உலமா பெருமிதம்!

,


இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எளிய மார்க்கம் இஸ்லாம் எனும் நிகழ்ச்சி கடந்த 26.05.12 இளையான்குடியில் நடைபெற்றது. 
இது இளையான்குடி புதூர் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரு மாநாடு போல் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டனர். இந்த நிகழ்ச்சியை அடுத்த சில தினங்களில் இளையான்குடி வட்டார ஜமாத்துல் உலமாவின் ஷரியத் விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஆலிம்கள், இந்த நிகழ்ச்சியை மனதார பாராட்டினர்.
  “பல பெண்கள் தங்களை தொலைபேசியிலும் நேரிலும் தொடர்பு கொண்டு ஐ.என்.டி.ஜே நடத்திய குர்ஆன் போட்டியில் கலந்து கொள்வதற்காக குர்ஆன் வசனங்களை கேட்டறிந்ததாகவும் இத்தனை பெண்களை குர்ஆனோடு தொடர்பு கொள்ள வைத்த அந்த சகோதரர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்” என ஷரியத் பாதுகாப்பு பொதுக் கூட்டத்தில் அவர்கள் பேசினர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
-மூஸா ராஜு.

0 comments to “500 பெண்களை திருக்குர்ஆனை புரட்ட செய்த இதஜவின் நிகழ்ச்சி! -ஜமாஅத்துல் உலமா பெருமிதம்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates