திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, August 19, 2012

நள்ளிரவில் மருதாணி வதந்தி! நேரில் சென்ற எஸ்.எம்.பாக்கர்!

,
மதினாவில் நள்ளிரவில் ஒரு பெரும் சப்தம் வந்த போது மக்கள் எல்லாம் வீடுகளை விட்டு வெளியே வந்தனர் ! அப்போது சப்தம் வந்த திசையில் இருந்து வந்த நபி ஸல் அவர்கள் 'ஒன்றும் பிரச்னை இல்லை அனைவர
ும் வீடுகளுக்கு செல்லுங்கள்' எனும் செய்தியை ஹதிஸ்களில் படித்துள்ளோம்.

மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் மாநபி ஸல் அவர்களின் வழியில் நள்ளிரவிலும் சென்று அதை தீர்க்கக் கூடிய ஒரு சமுக பொறுப்புள்ள தலைவராக திகழும் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் நேற்று நள்ளிரவு நடந்த மருதாணி வதந்தியை அடுத்து புளியந்தோப்பு பகுதிக்கு சென்று மக்களை அமைதிப் படுத்தியதோடு , சென்னை போது மருத்துவ மனைக்கு சென்று நிலைமையை கட்டுப் படுத்தியதோடு, மீடியாக்களுக்கும் பேட்டி அளித்து உண்மை நிலையை கூறினார். காவல் துறை அதிகாரிகள் அவரின் இந்த செயலை மிகவும் பாராட்டினர்.

கடந்த ரமலானில் நள்ளிரவில் கொட்டும் மழையில் முதல்வர் வீடு திருவல்லிக்கேணி பகுதி முஸ்லிம்களால் முற்றுகையிடப்பட்ட போதும் அதற்க்கு முந்திய ரமலானில் பைக் ரேஸ் விட்டதில் முஸ்லிம்களுக்கும் ,மீனவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் போதும் முன் நின்று மக்களைக் கட்டுப்படுத்தி பிரச்சனையை தீர்த்து வைத்தது குறிப்பிடத் தக்கது.

0 comments to “நள்ளிரவில் மருதாணி வதந்தி! நேரில் சென்ற எஸ்.எம்.பாக்கர்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates