திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, March 16, 2012

தமுமுக-மமக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ விடுதலை

,



தமுமுக-மமக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜாமீனில் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்கள்.
தமுமுக  தலைமையகத்தில் அவரை மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ், மமக இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் உள்ளிட்டோர் அவரை வரவேற்றார்கள். தொடர்ந்து குழுமியிருந்த தமுமுக-மமக தொண்டர்களிடையே மூத்த தலைவர் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ உரையாற்றினார். அவர் தனது உரையில், தனது விடுதலைக்காக இறைவனிடம் பிரார்த்தித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார். வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தம்மைப் போல் சிறைகளில் வாடிவரும் சிறைவாசிகள் அனைவரின் விடுதலைக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

0 comments to “தமுமுக-மமக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ விடுதலை”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates