திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, August 4, 2012

சத்தியத்தில் உறுதியும், சமுதாய இணக்கமும் சேலம் பொதுக்கூட்டம் உணர்த்திய உண்மைகள்

,
சேலம் பொன்னம்மாப்பேட்டையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் 
இந்திய தவ்ஹீத் ஜமாஅத பேச்சாளர் மவ்லவி H.அலீம்அல்புஹாரி'B.B.A.,B.L, களந்துகொண்டார், 
நிகழ்ச்சியை சேலம் வளர்பிறை இஸ்லாமிய பேரவை (VIP) ஏற்பாடு செய்திருந்தனர்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டத் தலைவர் சேலம் ஹுசைன் மிகச் சிறப்பாக ஒருங்கினைத்தார்,

அலீம் அல்புஹாரி உரையைத் தொடங்கி கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே மழை பெய்த போது களைந்து செல்லாத மக்கள்  ஓரம் கட்டி நின்று கவனித்ததும், ஒரு ஐயர் வந்து தனக்கு இது மாதிரி கூட்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்லி 25 ரூபாய் கொடுத்து இது என்னால் முடிந்த பங்களிப்பு என்று சொன்னதும்,கூட்டத்தின் ருசிகரமான நிகழ்வுகள்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தவ்ஹீத் சகோதரர்களின் பொதுக்கூட்டத்திற்கு சுன்னத ஜமாஅத பள்ளி நிர்வகிகள் முன்னிலை வகித்தனர்,
 த.மு.மு.க நிர்வாகிகள் தலமை தாங்கினர்,
 S.D.P.I நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராய் இருந்தனர்,
தன் அகம்பாவத்தால் அநாதையான அநாதைக் குழந்தை T.N.T.J தவிர மற்ற எல்லா அமைப்பினரும் ஆஜராகி இருந்து ஏகத்துவத்தின் எழுச்சி உரையை ரசித்துக் கேட்டனர்,
      இந்நிகழ்ச்சிக்கு முன்பாக சுன்னத் ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஓர் ஹிஃப்ஸ் மதரசாவின் 12 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்ற அலீம் அல்புஹாரி அழைக்கப்பட்டு சென்ற போது கண்ட மார்க்கத்திற்கு புரம்பான நிகழ்வுகளை அக்கனமே அன்பாக கண்டித்த போது உடனேயே திருத்திக்கொள்வதாக வாக்களித்தனர் அப்போது தான்
   இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் "சத்தியத்தில்  உறுதி ,சமுதாயத்தில் இணக்கம்" 
என்ற கொள்கையின் மகத்துவத்தையும்,  அநாதைக் குழந்தையின் அகம்பாவத்தின் அழிவையும் உணர முடிந்தது









 0 3 0 3

0 comments to “சத்தியத்தில் உறுதியும், சமுதாய இணக்கமும் சேலம் பொதுக்கூட்டம் உணர்த்திய உண்மைகள்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates