திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Tuesday, September 11, 2012

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் ஏராளமானோர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தனர்.

,




எல்லோரோடும் இணக்கம், ஏகத்துவத்தில் உறுதி!
உரிமைக்கு குரல் கொடுக்க உடனடி போராட்டம் !
மாமறைக் குர் ஆனை மக்களிடம் சேர்ப்போம்!
மருத்துவ மனை தோறும்  அழைப்புப் பணி செய்வோம் !
மார்க்கத்தை வீடுதோறும் வீதிதோறும் எடுத்து சொல்வோம்!

எனும் கொள்கை முழக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளாக செயல் பட்டு வரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின்  செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இந்த இயக்கத்தில் தங்களை இணைத்து வருகிறார்கள்! அந்த வகையில் தற்போது கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் ஏராளமானோர் தங்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடை பெற்றது! நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான மூத்த தவ்ஹீத் சகோதரர் நிஜாமுதீன் அவர்கள் தலைமையேற்று பேசினார்.அடுத்ததாக பேசிய மாநில நிர்வாகிகள் எஸ்.எம்.பாக்கர், தொண்டியப்பா, முனீர் உள்ளிட்டோர் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க மற்றும் சமுதாய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறினர்.  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே ஏகத்துவத்தின் பால் மக்களை ஒருங்கிணைத்து செயல் படுகிறது ! ஆகவே அனைத்து கொள்கை சகோதரர்களும் அதில் இணைந்து செயல் பட வேண்டும்! என கோரிக்கை விடுத்தனர்.

0 comments to “கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் ஏராளமானோர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தனர். ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates