திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, September 14, 2012

இந்திய தவ்ஹித் ஜமாத்தின் ஆவேச ஆர்பாட்டம்! அமெரிக்க தூதரகம் முற்றுகை காட்சி!

,
இந்திய தவ்ஹித் ஜமாத்தின் ஆவேச ஆர்பாட்டம்!
ஊர்வலமாக் அமெரிக்க தூதரகம் முற்றுகைகாட்சி!
                                                                    முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக நேசிக்கும்,மனித குலத்திற்கு அருட்கொடையான நபிகள் நாயகத்தின் கண்ணியத்தையும்,பெருமையையும்,இஸ்லாத்தின் மாண்புகளையும் குலைக்கும் வகையில் அமெரிக்க மத வெறியர்கள் தயாரித்திருக்கும் திரைப்படத்தையும்,அதன் ட்ரைலர் காட்சிகள் யூ டியுபில் பதிவேற்றம் செய்திருப்பதை கண்டித்தும்-இந்த கீழ் தரமான வேலையை செய்த கயவர்களை தண்டிக்கக் கோரியும் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்திய தவ்ஹித் ஜமாஅத்.

ஆண்களும் பெண்களுமாக பெரும் திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கண்டன சிறப்புரை நிகழ்த்திய இந்திய
தவ்ஹித்  ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர்....``எங்கள் உயிரைவிட மேலாக நாங்கள் மதிக்கும் நபி(ஸல்)அவர்களின் கண்ணியத்தை எவன் குலைத்தாலும் விட மாட்டோம்.இங்கே பக்கத்தில் தான் இருக்கிறது இந்திய தூதரகம்....நாங்கள் நினைத்தால்...இந்த கூட்டத்திற்கு கட்டளை இட்டால் தூதரகத்தை தரை மட்டம் ஆக்கிவிட முடியும்...இதோ பக்கத்திலே இருக்கிறது மாதா ஆலயம் அங்கே தாக்குதல் நடத்த எங்களால் இயலாத ஒன்றல்ல....காவல் துறை எங்களை தடுத்து விட முடியாது...நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்....ஏனென்றால் வரம்பு மீறுவதை எங்கள் நபி (ஸல்) கற்றுத்தரவில்லை.தடுத்திருக்கிறார்கள்...பொதுமக்களுக்கு தொல்லை தருவதைக் கூட தடுத்திருக்கிறார்கள்...பிறருக்கு அநியாயாம் செய்வதை தடுத்திருக்கிறார்கள்.இந்த கூட்டம் கட்டுப்பாடு மிக்க கூட்டம்...இங்கே நாங்கள் திரண்டு எங்களது உணர்வுகளை பதிவு செய்கிறோம்.

எங்களை சுட்டுத் தள்ளினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்...மரணத்தைக் கண்டு அஞ்சக்கூடிய கூட்டம் அல்ல இது... உலகத்திற்கு அருட்கொடையாக வந்த எங்கள் நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் அமெரிக்காவிற்கு எச்சரிக்கிறோம்....அமெரிக்க அதிபர் ஒபாமா உலக முஸ்லிம் மக்களிடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்..அந்த படத்தை தயாரித்தவன் தான் எங்கள் எதிரி...அமெரிக்க மக்களல்ல...
ஈசா நபியை அவமதித்து திரைப்படம் (தி டாவின்சி கோட் )எடுக்கப்பட்ட போது கூட நாங்கள் கண்டித்தோம்...ஹிந்து மதத்தை அவமதித்தாலும் நாங்கள் கண்டிப்போம்....மத உணர்வுகளில் எவரும் தலையிட அனுமதிக்க முடியாது.
இஸ்லாத்தை பற்றி அவதூறுகளை சொல்வதற்கு காரணம் இஸ்லாத்தின் வளர்ச்சி....செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் தான் அமெரிக்காவில் இஸ்லாம் வளர்ந்திருக்கிறது.இஸ்லாம் வேகமாக பரவுதை தடுக்க நினைக்கிறார்கள்...இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் இன்னும் வளரும்.
அமெரிக்க மதவெறியன் தயாரித்த திரைப்பட ட்ரைலரை உடனடியாக அமெரிக்க அரசு தடை செய்ய வேண்டும்.
அஸ்ஸாம் கலவரத்தை தொடர்ந்து வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் இந்திய அரசு நூற்றுக்கும் மேற்பட்ட வலை தளங்களை தடை செய்தது.அதே போல யூ டியுபை இந்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்....`` என்றார்.
கண்டன உரைக்கு முன்.அமெரிக்காவை எச்சரிக்கும் கோஷங்கள் எழுப்பப் பட்டன.முன்னதாக பேரணியாக கோஷம் எழுப்பியவாறு சென்ற மக்களை டி.டி.கே சாலை சந்திப்பில் தடுத்து நிறுத்தினர் காவல் துறையினர்.அங்கு சிறிது நேரம் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன.தொடர்ந்து மாநில செயலாளர் சித்திக் கன்னடன உரை நிகழ்த்தியதை தொடர்ந்து தலைவர் எஸ் .எம்.பாக்கர் கண்டன சிறப்புரை ஆற்றி முடித்தவுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்த காவல் வாகனங்களில் அமைதியாக கோஷம் எழுப்பிய படியே சென்ற மக்கள் கைதாகினர்.
ஆள்வார்பேட் சமுதாய கூடத்தில் அவர்களை சிறை வைத்தனர் காவல் துறையினர்.அங்கே மக்ரிப் தொழுகைக்கு பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
முஸ்லிகள் காயப்பட்டிருக்கிறார்கள்...அவர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த விடுங்கள் என்று சென்னை காவல்துறை கமிஷனர் திரிபாதி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய எ,எம்.பாக்கர் அவருக்கு தனது கண்டன உரையின் போது நன்றி தெரிவித்தார்.


















0 comments to “இந்திய தவ்ஹித் ஜமாத்தின் ஆவேச ஆர்பாட்டம்! அமெரிக்க தூதரகம் முற்றுகை காட்சி! ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates